×

விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, மார்ச் 11:  சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிவகங்கை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் முழுமையாக வேலை வழங்க வேண்டும். தினமும் ரூ.600 கூலி கொடுக்க வேண்டும். இத்திட்டத்தில் சமூக தணிக்கையில் கண்டறிந்த முறைகேடு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உத்தரவுப்படி கழிப்பறை கட்டியவர்களுக்கு முழுத் தொகை ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும். 60 வயதான அனைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கும் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தண்டிப்பன் தலைமை வகித்தார்.  மாவட்ட செயலாளர் மணியம்மா முன்னிலை வகித்தார். போராட்டத்தில் மாவட்டத்துணைத்தலைவர் திருநாவுக்கரசு, மாவட்ட துணைச் செயலாளர் முத்துக்கருப்பன், மாவட்ட பொருளாளர் வேங்கையா, மாவட்டக் குழு உறுப்பினர் லெட்சுமி மற்றும் ஏராளமான விவசாய தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags : demonstration ,Agricultural Workers Union ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்