×

விவசாயிகள் கூட்டம்

வத்தலக்குண்டு, மார்ச் 11: வத்தலக்குண்டுவில் தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் சரவணன், சட்ட ஆலோசகர் பழனிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், முல்லைப் பெரியார் ஆற்றில் மினரல் வாட்டர் கம்பெனிகள் லாரி லாரியாக தண்ணீர் திருடுவதை கண்டிக்காத அரசு கானி நிலத்தில் விளைந்த பயிர் கருகுகிறதே என்று ஆதங்கத்தில் குடம் குடமாக தண்ணீர் எடுக்கும் சிறு விவசாயிகளை தண்டிப்பது கண்டிக்கத்தக்கது. விவசாயிகளின் வாழ்வாதாரமான கருகும் பயிரை காப்பாற்ற தண்ணீர் எடுக்கும் சிறு விவசாயிகளை தண்டிப்பதை கைவிட வேண்டும். இந்தியா முழுவதும் நதிநீர் இணைப்பை மத்திய அரசு தீவரப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : Farmers Meeting ,
× RELATED தமிழகத்தில் நதிநீர் இணைப்பை...