×

கொடைக்கானல் நீதிமன்றத்தில் தபால் பெட்டி திறப்பு

கொடைக்கானல், மார்ச் 11: நீண்டா நாட்களாக கொடைக்கானல் நீதிமன்றத்தில் தபால் போக்குவரத்திற்காக தபால் பெட்டி அமைக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள், பொதுமக்கள் மற்றும் வழக்கு காரணமாக நீதிமன்றம் வந்து செல்பவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து தபால் துறை உதவியுடன் கொடைக்கானல் நீதிமன்ற வளாகத்தில் புதிய தபால் பெட்டி அமைக்கப்பட்டது. இந்த தபால் பெட்டியை நீதிபதி தினேஸ்குமார் முதல் தபாலை போட்டு திறந்து வைத்தார். வட்ட சட்ட பணிகள் குழுவினர், தபால் துறையினர் கலந்து கொண்டனர்.

Tags : Opening ,Kodaikanal Court ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு