×

கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து கோவை, நீலகிரி பா.ஜ. நிர்வாகிகள் ஆலோசனை


கோவை, மார்ச் 11:  கோவை அவினாசி சாலை நவ இந்தியா அருகேயுள்ள தனியார் ஓட்டலில் கோவை நகர், வடக்கு, தெற்கு மற்றும் நீலகிரி ஆகிய 4 மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், கோவை மாநில அமைப்பு பொதுசெயலாளர் விநாயகம், முன்னாள் எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் நந்தகுமார், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர், கோட்ட பொறுப்பாளர் செல்வகுமார், அகில இந்திய இளைஞரணி துணைத்தலைவர் முருகானந்தம், ஊடக பிரிவு மாநில தலைவர் கனகசபாபதி, அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் கல்யாணசுந்தரம், சூலூர் கவுன்சிலர் கோபால், காரமடை கவுன்சிலர் சங்கீதா உள்பட பலர் கலந்துெகாண்டனர். கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி மற்றும் அதிக உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், சி.பி. ராதாகிருஷ்ணன் பேசுகையில், “மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் மீண்டும் மத்தியில் அமைய ேவண்டும். வரும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Tags : BJP ,Coimbatore ,Executives ,Nilgiris ,
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...