×

மின் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம

ஈரோடு, மார்ச் 11:  ஈரோட்டில் வரும் 18ம் தேதி மின் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.இதுகுறித்து ஈரோடு மாவட்டம் கோபி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நேரு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்வாரிய உத்தரவின்படி, ஈரோடு மண்டலம் மற்றும் அதன் பகுதியில் உள்ள பிற மின் வாரிய அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற மின் வாரிய அலுவலர், பணியாளர்களின் குறைகளை கேட்டு, மனுக்களை பெற்று உடனடி தீர்வு பெற மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு முறை ஈரோடு மண்டல அலுவலகத்தில் ஓய்வுபெற்ற மின் ஊழியர்களின் குறைகளை கேட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, நடப்பாண்டுக்கான முதல் காலாண்டிற்கான மின் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் வரும் 18ம் தேதி ஈரோடு ஈவிஎன் ரோட்டில் உள்ள மின்வாரிய ஆய்வு மாளிகையில் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், தனி நபர் மனுக்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் சங்கங்களின் கோரிக்கைகள் முற்பகலிலேயே பெற்று கொள்ளப்படும். எனவே, மின் வாரியத்தில் ஓய்வுபெற்ற அலுவலர் மற்றும் பணியாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : E-Pensioners ,
× RELATED வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்றவர் உட்பட 3 பேர் கைது