×

பவானி அருகே கடன் தொல்லையால் தொழிலதிபர் தற்கொலை

பவானி, மார்ச் 11: பவானி அருகே கடன் தொல்லையால் தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டார். பவானி அருகே திப்பிசெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் முருகன் (67). இவரது மனைவி சுசீலா (57). இருவரும் மகன் ஜெயந்த்நாதன் (33), கோபிநாத் (29) ஆகியோருடன் வசித்து வந்தார். முருகன் தனது மகன்களுடன் சேர்ந்து பவானி அரசு மருத்துவமனை எதிர்ப்புறம் கார்மென்ட் கம்பெனி வைத்து நடத்தி வந்தார்.  கடந்த 22 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வந்த முருகன், தொழிலில் ஏற்பட்ட இழப்பால் அதிகமாக கடன் வாங்கி தவித்து வந்தார். கடன் கொடுத்தவர்களின் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் மனவேதனையில் இருந்து வந்தார். இந் நிலையில், நேற்று முருகன் ஜவுளி நிறுவனத்தில் நாடா கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின்பேரில் பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags : Businessman ,suicide ,Bhavani ,
× RELATED பாவங்களைப் போக்கும் பவானி அம்மன்