×

போலீசாருடன் வாக்குவாதம் குண்டர் சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது

தஞ்சை, மார்ச் 10: கும்பகோணத்தில் 2 பேரை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டார்.கும்பகோணம் வட்டம் பழைய பாலக்கரை புதுகள்ளர் தெருவை சேர்ந்த சந்திரசேகரன் மகன் ராஜ்குமார் (எ) வெள்ளையன் (33). இதேபோல் கும்பகோணம் வளையப்பேட்டை அக்ரகாரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் விக்னேஷ் (எ) ரெட்ட மண்டையன் (26). இந்த 2வாலிபர்கள் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன.இதையடுத்து தஞ்சை எஸ்பி மகேஸ்வரன் பரிந்துரையின்பேரில் கும்பகோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவணம் மற்றும் இதர ஆவணங்களின் பேரில் இருவரையும் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டார். இதையடுத்து வெள்ளையன், ரெட்ட மண்டையன் இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

363 மனுக்கள் குவிந்தனதஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) மணிமேகலை தலைமையில் நடந்தது. கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக்கடன் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 363 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களை பெற்று கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) மணிமேகலை, உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரத்தை மனுதாரருக்கு தெரிவிக்குமாறு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

Tags : Arrest ,youths ,
× RELATED குமாரபாளையம் அருகே கோர விபத்து பனை...