கந்தர்வகோட்டை, மார்ச்10: கந்தா–்வகோட்டை அருகே வெள்ளாளவிடுதி அரசு உயா்நிலைப்பள்ளியில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.வௌ்ளாளவிடுதி அரசு உயா்நிலைப்பள்ளியில் கந்தா–்வகோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை சார்பில் மகளிர் தின விழா தலைமையாசிரியர் அறிவுடைநம்பி தலைமையில் நடைபெற்றது. மகளிர் தினத்தையொட்டி மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளா் முத்துக்குமார், பொருளாளா் பவுனம்மாள் பாிசுகளை வழங்கி பாராட்டினர். அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலாளா் சிவானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரா ஆகியோர் பேசினா். அறிவியல் இயக்க கறம்பகுடி ஒன்றியச் செயலாளா் சாமியப்பன் உட்பட பலா் கலந்து கொண்டனர். சா்வதேச மகளிர் தினத்தையொட்டி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை மாணவ, மாணவிகள் நட்டனர்.