×

வேந்தன்பட்டியில் 22ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம்

பொன்னமராவதி, மார்ச்10: பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் வேந்தன்பட்டியில் ஜல்லிக்கட்டு வரும் 22ம்தேதி நடைபெறுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. தாசில்தார் திருநாவுக்கரசு தலைமை வகித்தார்.கூட்டத்தில் தாசில்தார் பேசுகையில்,ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு வேந்தன்பட்டியில் நடைபெறுவது வழக்கம்.அதேபோல இந்த ஆண்டும் வேந்தன்பட்டியில் ஜல்லிக்கட்டு வரும் 22ம்தேதி அரசு விதிமுறைகள் படி நடத்த வேண்டும்.இதில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றார். கூட்டத்தில் ஜல்லிக்கட்டு விழாக்குழுத்தலைவர் விஜயகுமார்,முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் பழனியப்பன், எஸ்ஐ பிரபாகரன், வழக்கறிஞர் தர், விஏஒ ஆரோக்கியராஜ் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...