×

கந்தர்வகோட்டையில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி

கந்தா–்வகோட்டை, மார்ச் 10: கந்தா–்வகோட்டையில் ஐயப்பன் கோயில் எதிரில் உள்ள வங்கார ஓடையில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி நடைப்பெற்றது.
மழை மற்றும் வௌ்ள காலங்களில் மீட்பு பணிகள் தொடா்பான போலி ஒத்திகை நிகழ்ச்சி தாசில்தார் சதீஷ் முன்னிலையில் தீயணைப்பு மற்று மீட்புத்துறையின் நிலைய அலுவலர் ஆரோக்கியசாமி தலைமையில் தீயணைப்பு கமாண்டோ வீரா்கள் செயல்முறை விளக்கம் நடத்தி காண்பித்தனா். இதில் குளத்தில் விழுந்து நீச்சல் ெதரியாமல் தத்தளிக்கும் ஒருவரை எப்படி மீட்க வேண்டும். மீட்கப்பட்ட நபருக்கு உடனடி முதலுதவிகள் ெசய்ய வேண்டியது மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மழை வௌ்ளம் போன்ற பேரிடர் காலங்களில் எவ்வாறு அதிலிருந்து தப்பிப்பது என ஒத்திகை செயல்களை தீயணைப்பு வீரா்கள் செய்து காண்பித்தது தத்ரூபமாக இருந்தது.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...