தா.பழூர் மார்ச் 10: ஜெயங்கொண்டம் அருகே உள்ள கரடிகுளம் ரோட்டு தெருவை சேர்ந்த செல்வமணி என்பவரது மகன் மணிவண்ணன் (31). இவர் தனது சொந்த வேலை காரணமாக கும்பகோணம் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். கும்பகோணம்- ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில் ஜெயங்கொண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, இறுகையூர் பொய்யாமொழி மகன் தீபக் என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியதில் மணிவண்ணன் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து தா.பழூர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.