×

கல்லூரி மாணவி மாயம் போலீசில் தாய் புகார்

கரூர், மார்ச் 10: கரூரில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கரூர் தாந்தோணிமலை இந்திரா நகரை சேர்ந்த கற்பகவள்ளி- சுகுந்தன் தம்பதியின் மகள் ஹரிபிரியா(18). இவர் கரூர் அருகேயுள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 4ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அதன் பின் வீடு திரும்பவில்லை. சக தோழிகள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாய் கற்பகவள்ளி, தாந்தோணிமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து மாயமான ஹரிபிரியாவை தேடி வருகின்றனர்.

நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்தோகைமலை ஒன்றியம் ராக்கம்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் அளித்த மனுவில், கூடலூர் ஊராட்சிக்குட்பட்ட ராக்கம்பட்டியில் துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. துவக்கக் கல்வி முடிந்ததும் அருகில் உள்ள சங்காயிபட்டி, குண்ணாகவுண்டன்பட்டி, செ.கல்லுப்பட்டி, சே,வலையபட்டி, மருதூர், காந்திநகர்பகுதியில் வசிக்கும் மாணவர்கள் ஜி.உடையாபட்டி பள்ளிக்கு 5கிமீ தூரம் சென்றுவருகின்றனர். எனவே இப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். மேலும் தோகைகமலை பாதிரிப்பட்டி-குளித்தலை, செல்லும் டவுண் பஸ்சை கழுகூர், மருதூர், ராக்கம்பட்டி, சங்காயிபட்டி. காந்திநகர், ராம்நகர், குண்ணாகவுண்டம்பட்டி, ஆதனூர் வழியாக உள்ளே வந்துசெல்லும் ஆவண செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Tags :
× RELATED வங்கியாளர்கள் கண்காணிக்க வேண்டும்...