×

தெலங்கானா கவர்னர் தமிழிசை திருச்சி வருகை

திருச்சி, மார்ச் 10: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தெலங்கானா கவர்னர் தமிழிசை நேற்று இரவு திருச்சி வந்தார். தெலங்கானா மாநிலம் கவர்னர் தமிழிசை விமானம் மூலம் நேற்று இரவு திருச்சி வந்தார். திருச்சி வந்த அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் சிவராசு பூங்கொத்து  வரவேற்றார். அதை தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் புறப்பட்ட கவர்னர் தமிழிசை, மன்னார்புரத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் ஓய்வு எடுத்தார். இன்று காலை 8.30 மணிக்கு புறப்பட்டு ரங்கம் செல்கிறார். அங்கு காலை 9 மணிக்கு ரங்கநாதரை தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருச்சி இபி ரோட்டில் உள்ள சந்தானம் வித்யாலயா சீனியர் செகன்ட்ரி பள்ளியை திறந்து வைத்து பேசுகிறார். விழாவில் செயலாளர் குஞ்சிதபாதம் வரவேற்று பேசுகிறார். முன்னாள் துணைவேந்தர் மீனா முன்னிலை வகிக்கிறார். விழா முடிந்தபின் அங்கிருந்து புறப்பட்டு மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டல் மகாலில் பெண்கள் தினவிழாவில் கலந்துகொண்டு பேசுகிறார். விழா முடிந்த பின், கார் மூலம் புறப்பட்டு தேனி செல்கிறார். தொடர்ந்து இரவு மதுரையில் இருந்து விமானம் மூலம் ஹைதராபாத் செல்கிறார். தெலங்கானா கவர்னர் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags : Telangana ,Governor ,Tamil Nadu ,
× RELATED காதலனை திருமணம் செய்து கொண்டதால்...