×

மாணவிகள் மீது ஆசிரியை புகார் ஆசிரியை மீது மாணவிகள் புகார்

கடலூர், மார்ச் 10: கடலூர் செம்மண்டலத்தில் மகளிருக்கான அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் இயந்திரப்பட வரைவாளர் பாடத்துறை ஆசிரியை ஜெயலட்சுமி(55) உள்ளார். இவர் கடந்த வாரம் கடலூர் புதுநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தன்னிடம் பயிலும் ஐந்து மாணவிகள் தன்னை தாக்கியதாக குறிப்பிட்டிருந்தார். ஆசிரியை ஒருவரே தன்னிடம் பயிலும் மாணவிகள் தன்னை தாக்கிவிட்டதாக புகார் அளித்தது காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்த போதிலும் அப்புகாரின் பேரில் விசாரணை நடத்துவதற்காக குறிப்பிட்ட 5 மாணவிகளையும் காவல்நிலையத்திற்கு வருமாறு கூறினர். இதனால் மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான மாணவிகள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தங்கள் ஆசிரியை மீது புகார் அளித்தனர். அதில் சம்பந்தப்பட்ட ஆசிரியை பாடம் நடத்துவதில்லை. இதுகுறித்து கேட்டால் ஆபாசமான வார்த்தைகளால் எங்களை திட்டுகிறார். மகனை வரவழைத்து தாக்குவேன் என அச்சுறுத்துகிறார். அவரால் எங்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே இது
தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுக்கு புதிய ஆசிரியையை நியமித்து எங்கள் கல்வி நலனை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

Tags : Teacher ,
× RELATED அரசு ஊழியர்கள் மீது கரிசனை போல...