×

அனுமதியின்றி இயங்கிய குடிநீர் ஆலைக்கு சீல்

முஷ்ணம், மார்ச் 10: பாளையாங்கோட்டையில் அனுமதியின்றி இயங்கிய குடிநீர் ஆலைக்கு வட்டாட்சியர் சீல் வைத்தார்.   முஷ்ணம் அருகே பாளையாங்கோட்டையில் தனியார் குடிநீர் விற்பனை ஆலை இயங்கி வந்தது. இதன் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து முஷ்ணம் வட்டாட்சியர் புகழேந்திக்கு வந்த தகவலையடுத்து அந்த குடிநீர் விற்பனை ஆலைக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது குடிநீர் நிலத்தடி நீர்வாரியத்தின் அனுமதியின்றியும், மாசுகட்டுப்பாடுவாரியத்தின் அனுமதியின்றியும் இயங்கி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியர் புகழேந்தி அந்த ஆலையை மூடி சீல் வைத்தார். அப்போது கிராம உதவியாளர் காமராஜ் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : plant ,
× RELATED கூடங்குளம் முதலாவது அணுமின்...