உளுந்தூர்பேட்டை, மார்ச் 10: உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் நகர கிளை கூட்டம் நடந்தது. நகர தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் முனுசாமி, மாவட்ட தலைவர் பக்ஷி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ஜாபர்அலி வரவேற்றார். இதில் மாநில பொதுச்செயலாளர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் பிடாகம் ஊராட்சிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாற்றம் காலதாமதம் இன்றி வழங்கிட வேண்டும். பிடாகம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெருக்களிலும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.