×

10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம்

புதுச்சேரி, மார்ச் 10: மாசிமக தீர்த்தவாரியையொட்டி ஸ்ரீசப்தகிரி அறக்கட்டளை சார்பில் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. புதுச்சேரி ஸ்ரீசப்தகிரி அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் மாசிமக தீர்த்தவாரியை முன்னிட்டு வடை, பாயாசத்துடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார்கள். அதேபோல் இந்தாண்டும் ஸ்ரீசப்தகிரி அறக்கட்டளை சார்பில் மாசிமக தீர்த்தவாரிக்கு வந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு டி.வி.நகரில் உள்ள சாய்பாபா திருமண மண்டபத்தில் வைத்து அன்னதானம் வழங்கப்பட்டது. சபாநாயகரும், ஸ்ரீசப்தகிரி அறக்கட்டளை தலைவருமான வி.பி.சிவக்கொழுந்து தலைமையில் நடந்த அன்னதான நிகழ்ச்சியை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜான்குமார், தீப்பாய்ந்தான், விஜயவேணி, திமுக எம்எல்ஏ வெங்கடேசன், காங்கிரஸ் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், துணை தலைவர் தேவதாஸ், பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், செண்பகா ரெசிடன்சி பாஸ்கரன், சத்யா ரெசிடன்சி சேது, கூல்கேட் தாண்டவம் மற்றும் செங்குந்தர் சங்க நிர்வாகிகள், பாண்டிச்சேரி சென்டரல் லயன் சங்க நிர்வாகிகள், காங்கிரஸ் நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், வியாபார பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். காலை 11.30 மணிக்கு தொடங்கிய அன்னதானம் மாலை 4 மணி வரை நடைபெற்றது. அன்னதானத்துக்கு வந்தவர்களை சப்தகிரி வி.பி.ராமலிங்கம், ரமேஷ்குமார், விஜய் ஆனந்த் ஆகியோர் வரவேற்றனர்.

Tags : devotees ,
× RELATED திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி...