×

ஞாயிறு தோறும் ராஜபாளையத்தில் உலக மகளிர் தினவிழா

ராஜபாளையம், மார்ச் 10: ராஜபாளையத்தில் உலக மகளிர் தினவிழா நடந்தது. ராஜபாளையம் திருவனந்தபுரம் தெரு சமுதாயக் கூடத்தில் ஜனசேவா அறக்கட்டளை மற்றும் இந்தியன் தேசபக்தி இயக்கத்தின் சார்பில் உலக மகளிர் தினவிழா தலைவர் பலராம ராஜா தலைமையில் நடந்தது. பூபதி ராஜா கூட்டுறவு வங்கி தலைவர் ராதாகிருஷ்ண ராஜா கலந்துகொண்டு மகளிர்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மனநல மருத்துவர் அர்ஜுனன் விழிப்புணர்வு உரையாற்றினார். காவலன் செயலி செயல்விளக்கம் குறித்து தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுகச்சாமி பேசினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜனசேவ ரவீந்திர ராஜா, பாரதமாதா சரவணன் ஆகியோர் செய்திருந்தனர். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags : World Women's Day ,Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!