×

கிராஅத் ஓதும் போட்டியில் பள்ளி மாணவர்களுக்கு பரிசு

கீழக்கரை, மார்ச் 10: கீழக்கரை அல் மதர்ஸா செய்யதிய்யாவில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா, மகான் குத்பு செய்யது முகம்மது அப்பா தர்ஹா வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சுல்தான் தலைமை வகித்தார். ஜலாலுதீன், முத்துவேல் முன்னிலை வகித்தனர். முகம்மது அப்பாஸ் இர்ஷாதி வரவேற்றார்.இதில் இமாம் முகம்மது இர்ஷாதி பேசுகையில், மாணவ,மாணவிகள் பெற்றோர்களின் வளர்ப்பில்தான் அவர்களின் எதிர்காலம் அமையும். மேலும் செல்போனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்தும் விளக்கி பேசினார்.இதில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கிராஅத் ஓதும் போட்டி, குர்ஆனை பாராமல் ஓதுவது உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முருகேசன் நன்றி கூறினார்.

Tags : schoolchildren ,Kraath Othum ,
× RELATED ஸ்ரீநகரில் ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து..!!