×

திருமங்கலம் அருகே காட்சி பொருளான ஹைமாஸ் விளக்கு மின் இணைப்பு வழங்குவது எப்போது?

திருமங்கலம், மார்ச் 10: மேலக்கோட்டை கிராமத்தில்  மின்இணைப்பு வழங்கபடாததால், ரூ.4 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்கு காட்சி பொருளாக நிற்கிறது. திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மேலக்கோட்டை, கரடிக்கல், மறவன்குளம், ராயபாளையம் உள்ளிட்ட 5 பெரிய ஊராட்சிகளில் கடந்தாண்டு தலா ரூ.4 லட்சத்தில் ஹைமாஸ் விளக்குகள் அமைக்கப்பட்டன. இதில், மேல்கோட்டை ஊராட்சியில் அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்கிற்கு மின் இணைப்பு இல்லாமல், இதுவரை ஒருநாள் கூட எரியவில்லை. இதனால், திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், ஹைமாஸ் விளக்குகள் எரிய துவங்கினால் குற்றச்சம்பவங்கள் குறையும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தில் கேட்டபோது, ‘ஹைமாஸ் விளக்குகள் அமைக்கப்பட்டு, மின்இணைப்பிற்கு பணம் செலுத்தவில்லை. விரைவில் செலுத்த உள்ளோம். இன்னும் ஓரிரு வாரத்தில் ஹைமாஸ் விளக்கு எரியும்’
என்றனர்.

Tags : Himas ,Thirumangalam ,
× RELATED மதுரை திருமங்கலம் அருகே விபத்தில் 4 பேர் பலி