×

வீட்டை காலி செய்யுமாறு கொலை மிரட்டல் விடுக்கின்றனர் கம்பிளியம்பட்டி மக்கள் புகார்

திண்டுக்கல், மார்ச் 10: வீட்டை காலி செய்யுமாறு கொலை மிரட்டல் விடுப்பதாக கம்பிளியம்பட்டி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். திண்டுக்கல் சிலுவத்தூர் வழி கம்பிளியம்பட்டியை சேர்ந்த காளியம்மன் உள்பட பலர் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர்  விஜயலட்சுமியிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘நாங்கள் மேற்கண்ட பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். எங்களுக்கும், இதே ஊரில் வசிக்கும் பழனிச்சாமி, மகேஸ்வர், நாகராஜ் ஆகியோருக்கும் இடத்திற்காக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. மூவரும் சேர்ந்து முறைகேடாக பட்டா பெற்று எங்களை வீட்டை காலி செய்யுமாறும், கொலைமிரட்டலும் விடுத்து வருகின்றனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம், உடைமைகளை இழக்க நேரிடும். மோசடியில் ஈடுபட்ட மூவர் மீதும், மேலும் இவர்களுக்கு துணைபோன அரசு அதிகாரிகள் மீதும் உரிய சட்ட நடடடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

Tags : Kambliyampatti ,murder ,house ,
× RELATED புதுச்சேரியில் சிறுமி கொலை சம்பவம்: ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி!