×

மதுபோதையில் தகராறு தலையில் கல்லைப் போட்டு வாலிபர் படுகொலை

பூந்தமல்லி, மார்ச் 10 : மதுரவாயலில் வாலிபர் தலையில் கல்லைப் போட்டு படுகொலை செய்துள்ளனர். சென்னை மதுரவாயல், பாலகுமார் நகரில் உள்ள காலி மைதானத்தில் வாலிபரின் சடலம் கிடப்பதாக நேற்று மதுரவாயல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். முகம் சிதைந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில், சடலமாக கிடந்தவர் மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம், பாரதியார் குறுக்கு தெருவை சேர்ந்த முனியசாமி (28), இறைச்சி கடையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் முனியசாமி மது அருந்த காலி மைதானத்துக்கு சென்றுள்ளார். போதை தலைக்கேறியதும் நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, முனியசாமியின் தலையில் கல்லை தூக்கிப்போட்டுள்ளனர். இதில், அதில் முகம் சிதைந்து அவர் இறந்துள்ளார். அதன்பிறகு சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு அவர்கள் தப்பி சென்ற விவரம் தெரிய வந்தது. இதையடுத்து மதுரவாயல் போலீசார் வழக்கு பதிந்து, கொலைக்கு என்ன காரணம், அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : dispute ,
× RELATED கொடுங்கையூர் டாஸ்மாக் கடையில் தகராறு...