×

மாநகர பேருந்தில் சென்ற மூதாட்டியிடம் நகை அபேஸ்

சென்னை: மாநகர பேருந்தில் சென்ற மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி 5 சவரன் செயினை அபேஸ் செய்து தப்பிய 3 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். அயனாவரத்தை சேர்ந்தவர் உஷாராணி (63). இவர், நேற்று அயனாவரத்தில் இருந்து திருவல்லிக்கேணிக்கு மாநகர பேருந்தில் பயணம் செய்தார். அப்போது உஷாராணி அருகே நின்று கொண்டிருந்த 3 பெண்கள், ‘உங்கள் கழுத்தில் உள்ள செயின் அறுந்துள்ளது. எனவே, கழற்றி பையில் வைத்து பத்திரமாக எடுத்து செல்லுங்கள்,’ என கூறி உள்ளனர்.

இதை நம்பிய மூதாட்டி தனது கழுத்தில் கிடந்த 5 சவரன் செயினை கழற்றி, பையில் வைக்க முயன்றார். அப்போது, அந்த 3 பெண்களும் மூதாட்டிக்கு உதவி செய்வது போல் நடித்து, செயினை அபேஸ் செய்து கொண்டு பெரியமேடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சென்றனர். சிறிது நேரம் கழித்து மூதாட்டி தனது கழுத்தில் செயின் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே சம்பவம் குறித்து பெரியமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய 3 பெண்களை தேடி வருகின்றனர்.

Tags : Jewelry Abbey ,
× RELATED மூதாட்டியிடம் நகை அபேஸ்