×

கடன் தொல்லையால் கழுத்தறுத்து தொழிலாளி தற்கொலை முயற்சி

சென்னை: சென்னை ஜாம்பஜார் கம்மம் தர்வாஜா தெருவை சேர்ந்தவர் பாபு (48). இவர் தனது மாமியார் வீட்டிலேயே தங்கி நகை பட்டறை தொழில் செய்து வருகிறார். தொழிலில் போதிய வேலை இல்லாத காரணத்தால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு வீட்டில் காய்கறி வெட்டும் கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை, உறவினர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பாபுவுக்கு கழுத்தில் 5 தையல் போடப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஜாம்பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை