×

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

அம்பத்தூர்: அம்பத்தூர், வெங்கடாபுரம், கணபதி முதல் தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி (75). ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர். இவர், நேற்று மாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது, மர்ம நபர் கதவை தட்டியுள்ளார். சரஸ்வதி எழுந்து வந்து, அந்த நபரிடம், நீங்கள் யார், என்ன வேண்டும், என கேட்டுள்ளார். அப்போது அந்த நபர், ‘உங்களுக்கு பென்ஷன் முறையாக வருகிறதா?, இல்லையென்றால் என்னிடம் கூறுங்கள். நான் வாங்கி தருகிறேன்,’ என கூறிகொண்டே, திடீரென சரஸ்வதி கழுத்தில் கிடந்த 5 சவரன் செயனை பறித்துக்கொண்டு, வெளியில் தயாராக இருந்த பைக்கில் ஏறி தப்பினார். இதுகுறித்து சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில், அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Chain ,grandfather ,
× RELATED நகை பறித்துவிட்டு மூதாட்டியை வீட்டுக்குள் வைத்து பூட்டிய மர்ம நபர்