×

மகுடஞ்சாவடி அருகே ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

இளம்பிள்ளை, மார்ச் 10: மகுடஞ்சாவடி அருகே ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மகுடஞ்சாவடி ஒன்றியம், தப்பக்குட்டை ஊராட்சி பகுதியில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. தமிழக அரசு தற்போது ஏரி மற்றும் நீர் ஓடையினை தூர்வாரி, மழைநீர் சேகரிக்கும் வகையில் கட்டமான பணியை முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில், இளம்பிள்ளை- இடைப்பாடி செல்லும் சாலையில் உள்ள இந்த ஏரியின் பிரதான ஓடையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். ஓடையை சிறிது சிறிதாக ஆக்கிரமித்ததால், தற்போது மிகவும் குறுகலாக மாறி விட்டது. இந்நிலையில், ஓடையில் மண்ணை கொட்டி அடைத்து வருகிறார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வருவாய்த்துறையினரும், வட்டார வளர்ச்சி அலுவலரும் உரிய நடவடிக்கை எடுத்து, ஓடையை மீட்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags : Makutanchavadi ,
× RELATED மகுடஞ்சாவடியில் மேம்பாலம் கட்டும் பணிகள் நிறுத்தம்