×

நாமக்கல் அருகே பட்டப்பகலில் இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்த முயற்சி

நாமக்கல், மார்ச் 10: நாமக்கல் அருகே பட்டப்பகலில் இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்த முயன்ற வாலிபரை பொதுமக்கள் விரட்டி பிடித்து, தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்தவர் பூவராகவன்(27). ஆட்டோ டிரைவரான இவர், நாமக்கல் கடைவீதியில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் வேலை பார்த்து வரும் 21 வயது இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண் காதலை ஏற்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில், நேற்று நாமக்கல் வந்த பூவராகவன் அவரது நண்பர்கள் செந்தில்(24), குமார்(26) ஆகிய 3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை கடத்த திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, நேற்று காலை 3 பேரும் நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து, ஜவுளி கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்த அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து ஆட்டோவில் ஏற்றி கடத்த முயன்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிடவே, 3 பேரும் அங்கிருந்து தப்பியோடினர். இதை பார்த்த பொதுமக்கள் குமாரை பிடித்து சராமரியாக அடித்து உதைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த போலீசார், குமாரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய இருவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : teenager ,graduation ,Namakkal ,
× RELATED பிரின்ஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா;...