×

பாகலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு


ஓசூர், மார்ச் 10: பாகலூர் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து, 5 பவுன் நகையை மர்ம நபர் திருடிச்சென்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஓசூர் தாலுகா சேவகானப்பள்ளி பக்கம் நாகிரெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் நேத்ராவதி(28). மளிகை கடை வைத்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகையை திருடிச்சென்றனர். இது குறித்து நேத்ராவதி பாகலூர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Bagalur ,
× RELATED காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரம் பிளஸ்...