×

இளம்பெண் தற்கொலை

கிருஷ்ணகிரி, மார்ச் 10: மகராஜகடை அருகே சிந்தகம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்  சந்திரசேகர். இவரது மனைவி அம்சா(26). இவர் கடந்த சில ஆண்டுகளாக வலிப்பு  நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சையும்  பெற்று வந்தார். ஆனால் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.  இதனால் மனமுடைந்த அம்சா, நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து மகாராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை