×

நாளை கொடியேற்றத்துடன் துவக்கம் திருத்துறைப்பூண்டியில் ஒரே நாளில் 3 இடங்களில் தொடர் திருட்டு

திருத்துறைப்பூண்டி, மார்ச் 10:திருத்துறைப்பூண்டியில் ஒரே நாளில் 3 இடங்களில் பணம் மற்றும் ரூ.1.43 லட்சம் மதிப்புள்ள பாண்டு பேப்பர்களையும் மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் கடைத்தெருவில் உள்ள காளியம்மன் கோயில் கிரில் கேட்டை உடைத்து முன்புறம் இருந்த உண்யலை உடைத்து ரூ 5,000மும், நெடும்பலம் ரயில்வே கேட் அருகே கருணாநிதி என்பவரது பெட்டிக் கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றனர். திருத்துறைப்பூண்டி அருகே பாமனி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் (பொ) மணிவேலன் திருத்துறைப்பூண்டிக்கு தனது பைக்கில் வந்தவர் தெற்குவீதியில் உள்ள ஒரு வங்கியில் ரூ 39,000 ரொக்கம் மற்றும் தனது கையில் வைத்திருந்த ரூ.2 ஆயிரம் பணத்தை ஒரு பையில் வைத்து அதனுடன் பள்ளி புரவலர் திட்டத்திற்கு வழங்கப்பட்ட ரூ.1.43 லட்சம் மதிப்பிலான பாண்டு பேப்பர்களையும் வைத்து அதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடை முன்பு பைக்கை நிறுத்தி தனது பையை பைக்கில் மாட்டிவிட்டு டீ குடிக்க சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது, பணம் மற்றும் பாண்டு பேப்பர்கள் வைத்திருந்த பைபை காணவில்லை. இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசில் கோயில் செயல் அலுவலர் ராஜா,பெட்டிக் கடை உரிமையாளர் கருணாநிதி, அரசு மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் (பொ) மணிவேலன் ஆகியோர்புகார் செய்தனர். புகாரின்பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் ஒரே நாளில் மூன்று இடங்களில் ரொக்கம் மற்றும் பாண்டு பேப்பர்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Theft ,locations ,
× RELATED சென்னை- பெங்களூரு தேசிய...