×

அணுமின் நிலைய வேலைவாய்ப்பில் கூடங்குளம் மக்களுக்கு முன்னுரிமை

ராதாபுரம், மார்ச் 10: கூடங்குளம் அணுமின் நிலைய வேலைவாய்ப்புகளில் அந்த பகுதி மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என இன்பதுரை எம்எல்ஏ வலியுத்தினார்.
கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் அணுமின் நிலைய திட்ட இயக்குநர் சஞ்சய்குமாரை இன்பதுரை எம்எல்ஏ நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை எம்எல்ஏ வலியுறுத்தினார். செட்டிகுளம், கூடங்குளம் பகுதியில் மகளிர் கலைக்கல்லூரி அமைக்க கட்டிடம் மற்றும் அடிப்படை வசதிகளுக்கு உதவி செய்ய வேண்டும். நம்பியாற்று தண்ணீரை பம்பிங் மூலம் கொண்டு வந்து கூடங்குளம் பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும், கூடங்குளம் சுற்று வட்டாரப்பகுதியில் இருந்து நிலத்தடி நீரை உறிஞ்சி அணுமின் நிலைய கட்டுமானம் மற்றும் சுய தேவைகளுக்கு பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும்.

கூடங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். அணுமின் நிலைய வேலைகளுக்கு செல்லும் உள்ளூர் பணியாளர்களுக்கு அனுமதி பாஸ் வழங்குவதில் கடைபிடிக்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.      இந்த கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக திட்ட இயக்குநர் சஞ்சய்குமார் உறுதி அளித்தார். இந்த சந்திப்பின்போது ராதாபுரம் ஒன்றிய அதிமுக செயலாளர் அந்தோணி அமலராஜா மற்றும் அணுமின் நிலைய அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : Kudankulam ,power station ,
× RELATED வாலிபர் கைது ரயில்வே பாதுகாப்பு படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு