வள்ளியூர், மார்ச் 10: வள்ளியூரில் கலையரங்கம் முன் எஸ்டிபிஐ சார்பில் ‘‘குடியுரிமை நம் பிறப்புரிமை’’ என்ற தலைப்பில் தர்ணா போராட்டம் நடந்தது. ராதாபுரம் சட்டமன்ற தொகுதி துணைத்தலைவர் உமர்ஹம்சா தலைமை வகித்தார். வள்ளியூர் ஜமாஅத் தலைவர் பீர்ஜலால், துலுக்கர்பட்டி ஜமாஅத் தலைவர் முஹம்மதுஹக், வள்ளியூர் நகர காங்கிரஸ் சீராக் இசக்கியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூ. நகர தலைவர் முஹம்மது பயாஸ், இந்திய கம்யூ. நகர செயலாளர் வேம்பு சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்டிபிஐ ராதாபுரம் தொகுதி பொருளாளர் சலீம் வரவேற்றார். நெல்லை மாவட்ட பொருளாளர் களந்தை மீராசா மற்றும் பச்சை தமிழகம் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், ஜீனத் ஷராபியா, முகம்மது கம், ஜெயக்குமார், கல்யாணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.