×

பணிக்கநாடார் குடியிருப்பு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் தின விழா

திருச்செந்தூர், மார்ச் 10: குரும்பூர் அருகே பணிக்கநாடார் குடியிருப்பு கணேசர் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் 32வது பெற்றோர் ஆசிரியர் தினவிழா நடந்தது.
 பள்ளிச் செயலாளர் சுப்பு தலைமை வகித்தார். ஆட்சிமன்றக்குழு தலைவர் துரை சுரேஷ்ராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் தேன்மொழி ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியை அம்பிகா வரவேற்றார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முன்னாள் முதுகலை ஆசிரியர் ஜெய ஆதித்தன் சிறப்புரையாற்றினார். இதையடுத்து பொதுத்தேர்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  விழாவில் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வித்யாதரன், ஆசிரியர்கள், மழலையர் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் என ஏராளமானோர் பங்கேற்றனர். ஆசிரியை பத்மா வெங்கட லட்சுமி நன்றி கூறினார்.

Tags : Parent Teacher's Day Ceremony ,Workplace Residential School ,
× RELATED திருமலாபுரம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்