×

ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு

ஓட்டப்பிடாரம், மார்ச் 10:  ஓட்டப்பிடாரம் வட்டார வள மையத்தில் பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலைப் பள்ளி  ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் நடந்த இப்பயிற்சி வகுப்பில் பள்ளியின் உள்கட்டமைப்பு, ஆரோக்கியம் சுகாதாரம், உளவியல், சமூக நோக்கங்கள், போக்சோ சட்டம், மற்றும் ஆசிரியர்களின் பங்கும் கடமைகளும் குறித்து விளக்கப்பட்டன. இதில் 173 ஆசிரியர்கள் பங்கேற்று பயன்பெற்றனர். ஏற்பாடுகளை ஓட்டப்பிடாரம் வட்டார வளமைய மேற்பாற்வையாளர் (பொ) விஜயலட்சுமி, வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் கனிமொழி மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

Tags : teachers ,
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்