சாத்தான்குளம், மார்ச் 10:திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பாதயாத்திரை சென்று வருகின்றனர். இடைச்சிவிளையில் பாதயாத்திரையாக வந்த பக்தர்களுக்கு இந்து முன்னணி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாநில பொதுச் செயலாளர் டாக்டர் அரசு ராஜா, இதைத் துவக்கிவைத்தார். இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு சாலை பாதுகாப்பு சிகப்புநிற ஸ்டிக்கரை டிஎஸ்பி பால்துரை வழங்கினார். இதில் அன்னையர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் சுந்தரவேல், தச்சன்விளை இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர் சக்திவேல், பனைவிளை இந்து முன்னணி கமிட்டி நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, முத்துகிருஷ்ணன், கோயில்ராஜ், வேல்குமார், பிரதீஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
உடன்குடி : இதேபோல் பரமன்குறிச்சி வழியாக நடந்துவந்த முருக பக்தர்களுக்கு ஒன்றிய இந்து முன்னணி சார்பில் பரமன்குறிச்சி அடுத்த குருநாதபுரத்தில் நீர்மோர் வழங்கப்பட்டது. தலைமை வகித்த ஒன்றிய இந்து முன்னணி பொதுச்செயலாளர் கேசவன், துவக்கிவைத்தார். இந்து அன்னையர் முன்னணி ஒன்றியச் செயலாளர் பிரம்மசக்தி, கிளைத் தலைவி கலைராணி, செயலாளர் கல்யாணி பங்கேற்றனர்.