செய்யாறு, மார்ச் 10: செய்யாறு பட்டீஸ்வரர் கோயிலில் மாசி சதுர்த்தசி திருமுழுக்காட்டு லட்சார்ச்சனை பெருவிழா நடந்தது.செய்யாறு டவுன் தொழிற்பேட்டை பார்வதி உடனாய பட்டீஸ்வரர் கோயிலில் அம்பலவாண பெருமானுக்கு மாசி சதுர்த்தசி திருமுழுக்காட்டியை ஒட்டி செய்யாறு அருள்ஞானப் பெருவெளி சார்பில் 23வது ஆண்டு லட்சார்ச்சனை பெருவிழா நேற்று முன்தினம் நடந்தது.இதில் வந்தவாசி சைவசமய பேரவை அமைப்பாளர் அ.வே.முனுசாமி, சமரச சுத்த சன்மார்க்க சங்கத் தலைவர் மா.பழனிவேலு, அருள்ஞானப் பெருவெளி நிர்வாகிகள் த.கோ.சம்பந்தன், அ.முத்துக்குமரன், ஞான ஏகாம்பரம், தி.அ.சண்முகம், புரிசை ச.நடராசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, கோயில் சிவாச்சாரியார் டி.சோமாஸ்கந்தன் லட்சார்ச்சனை பெருவிழாவை தொடங்கினார். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அம்பலவாண பெருமான் நடராஜரை வழிபட்டனர்.