×

வேலூர் மாவட்டத்தில் 5 துணை தாசில்தார் பணியிட மாற்றம்

வேலூர், மார்ச் 10: வேலூர் மாவடடத்தில் 5 துணை தாசில்தார் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். காட்பாடி மண்டல துணை தாசில்தார் ராஜ்குமார், அணைக்கட்டு தலைமையிடத்து துணை தாசில்தார் சசிகலா, பேரணாம்பட்டு மண்டல துணை தாசில்தார் வடிவேலு ஆகியோர் 40 நாள் காவல் பயிற்சி பெற சென்றுள்ளனர். அதே பயிற்சியை முடித்து திரும்பிய குடியாத்தம் வட்ட வழங்கல் அலுவலர் முரளியை, காட்பாடி மண்டல துணை தாசில்தாராகவும், காட்பாடி தலைமையிடத்து துணை தாசில்தார் மகேஸ்வரியை, அங்கேயே தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சண்முகசந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Workplace Transfers ,Vellore District ,
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...