×

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் கார் தீப்பிடித்து எரிந்தது: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

சென்னை: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாமண்டூர் அருகே ஓடும் கார் தீப்பிடித்து எரிந்து எலும்பு கூடானது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்த குடும்பம் உயிர் பிழைத்தது. புதுச்சேரி மாநிலம், தன்வன்சேரி பகுதியை சேர்ந்தவர் சற்குணம் (40). இவர் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் நேற்று காலை காரில் சென்னை நோக்கி சென்றார். சற்குணம் காரை ஓட்டி வந்தார். நேற்று காலை 7 மணியளவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் அருகே வந்தபோது காரின் முன்பகுதியில் இருந்து திடீரென கரும்புகை எழுந்தது. இதனால், காரை நிறுத்திவிட்டு மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சற்குணம் உடனடியாக இறங்கினார்.

இதன் பிறகு காரை பரிசோதிக்க சென்றபோது திடீரென கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த சற்குணம் தன் மனைவி மற்றும் குழந்தைகளை உடனடியாக காரில் இருந்து இறக்கி, பாதுகாப்பான தூரத்துக்கு சென்றுவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கார் முழுமையாக எரிந்து எலும்புக்கூடுடாக மாறியது. இதுகுறித்து படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : highway ,Trichy ,Chennai ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!