×

கிணற்றில் குழந்தை சடலம் மீட்பு: கொலையா? விசாரணை

சென்னை: கிணற்றில் அழுகிய நிலையில் மிதந்த குழந்தையின் சடலத்தை போலீசார் கைப்பற்றி, கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.வாலாஜாபாத் அருகே நத்தப்பேட்டை, இருளர் குடியிருப்பு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பாழடைந்த கிணறு உள்ளது. இப்பகுதி வழியாக நேற்று காலை விவசாயிகள் வேலைக்கு சென்றபோது கடும் துர்நாற்றம் வீசியதால் அருகில் உள்ள கிணற்றுக்குள் எட்டி பார்த்தனர். அப்போது பெரிய டவல் சுற்றப்பட்டு குழந்தையின் சடலம் அழுகிய நிலையில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவலறிந்து வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் மிதந்த குழந்தையின் சடலத்தை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை யாருக்கு சொந்தமானது? என்ன காரணத்தினால் கிணற்றில் வீசினார்கள்? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Tags : Child corpse recovery ,well ,Investigation ,
× RELATED புகழூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு இல்லை