×

பேருந்து மோதி முதியவர் பலி

அண்ணாநகர்: கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு 2வது பிளாட்பாரத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த அரசு பேருந்தை பின்பக்கமாக எடுத்தபோது, நடைபாதையில் படுத்திருந்த முதியவர் மீது டயர் ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். தகவலறிந்த கோயம்பேடு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, முதியவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...