×

மாமியார் திட்டியதால் மருமகள் தீக்குளிப்பு மருத்துவமனையில் சீரியஸ்

மன்னார்குடி, மார்ச் 6: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டை காவல் சரகத்திற்குட்பட்ட துளசேந்திரபுரம் கிராமம் நடுத்தெருவில் வசிப்பவர் ராமச்சந்திரன் (37). கம்பி பிட்டர். இவரது மனைவி சாந்தி (30), நர்சிங் பட்டப்படிப்பு படித்தவர். இருவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் ராமச்சந்திரன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் சாந்தியும், அவரது மாமியாரும் இருந்துள்ளனர்.அப்போது சாந்தியை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சாந்தி நேற்று மதியம் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சாந்தியை மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் தீக்காயம் அதிகம் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பரவாக்கோட்டை எஸ்ஐ ஜெகஜீவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : mother-in-law ,
× RELATED சொத்துக்காக மாமனார், கணவரை கொன்றதுடன்...