×

முருகன் கோயிலில் கார்த்திகை விழா

முசிறி, மார்ச் 6: தொட்டியம் அருகே திருஈங்கோய்மலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் குமார கார்த்திகை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும், வெப்ப நோய்களால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்யவும், உலக நன்மைக்காகவும் சிறப்பு வழிபாடுகளும், கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது. பாலதண்டாயுதபாணி சுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடந்தது. பின்னர் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், இசை கச்சேரி ஆகியவை நடந்தன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Carnatic Festival ,Murugan Temple ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலுக்கு...