×

மல்லிப்பட்டினத்தில் மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

சேதுபாவாசத்திரம், மார்ச் 6: சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் கடல் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு அலுவலகம் திறப்பு விழா நடந்தது. தஞ்சாவூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொது செயலாளர் தாஜூதீன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மல்லிப்பட்டினம் மீன்வளத்துறை அலுவலகத்தில் கடல் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு துவக்கப்பட்டு முதன்முதலாக மீனவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. மீன் பிடி அமலாக்க பிரிவு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. விழாவில் கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் சுபா, மீன்வளத்துறை ஆய்வாளர் கெங்கேஸ்வரி, விசைப்படகு தஞ்சை மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம், நிர்வாகிகள் வடுகநாதன், செல்வக்கிளி, முத்து, இப்ராகிம், போலீசார்கள், மீனவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Awareness meeting ,fishermen ,Mallipatnam ,
× RELATED யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் தண்டனை...