×

செந்துறை அண்ணாநகரில் உதவி மின் செயற்பொறியாளர் அலுவலக கட்டிடம் திறப்பு

அரியலூர், மார்ச் 6: செந்துறை அண்ணாநகர் மின்வாரிய அலுவலக கட்டிடத்தில் உதவி மின் செயற்பொறியாளர் அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டது.
செந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மின்சார வாரிய அலுவலகத்தில் ரூ.19.2 லட்சம் மதிப்பில் உதவி மின் செயற்பொறியாளர் கட்டிடம் திறப்பு விழா நடந்தது. இந்த கட்டிடத்தை கலெக்டர் ரத்னா திறந்து வைத்தார். இந்த கட்டிடத்தில் உதவி மின் செயற்பொறியாளர் அறை, தளவாடங்கள் அறை, பணம் செலுத்தும் இடம் ஆகிய அறைகள் உள்ளன.

பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் தேன்மொழி, மேற்பார்வை பொறியாளர் கருப்பையா, செயற்பொறியாளர்கள் சேகர், செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், ஆதனக்குறிச்சி கூட்டுறவு சங்க தலைவர் சுரேஷ், தாசில்தார் தேன்மொழி பங்கேற்றனர்.

Tags : Assistant Electrical Operator ,Anantnagar ,
× RELATED அண்ணாநகர், அமைந்தகரை பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்