×

அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ₹5 லட்சம் மதிப்பில் நல உதவிகள்

சேலம், மார்ச் 6: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, சேலம் மாவட்ட அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில், 972 பயனாளிகளுக்கு ₹5 லட்சம் மதிப்பிலான நல உதவிகள் வழங்கப்பட்டது.
ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் சென்னகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் 972 பயனாளிகளுக்கு ₹5 லட்சம் மதிப்பிலான நல உதவிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ‘நாட்டில் எத்தனையோ அரசியல் இயக்கங்கள் இருந்தாலும், சமூகத்தில் அடித்தட்டில் வாழும் ஏழை- எளிய, நசுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடும் ஒரே இயக்கம் அதிமுக தான். நகரப் பகுதிகளுக்கு இணையான அனைத்து வசதிகளையும், கிராம மக்கள் அனைவரும் பெற்றிடவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, பொருளாதாரத்தை உயர்த்தும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம்,’ என்றார். நிகழ்ச்சியில் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : union ,Anna ,
× RELATED திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து...