×

உடலை குளிப்பாட்டும் போது காயம் இருந்தது அம்பலம் சேலத்தில் இளம்பெண் மர்மச்சாவு

சேலம், மார்ச் 6: சேலத்தில் தூக்கில் தொங்கிய இளம்பெண்ணின் உடலை குளிப்பாட்டும்போது முதுகில் காயம் இருந்ததால் அவர் கொலை செய்யப் பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் கன்னங்குறிச்சி கோம்பைப்பட்டி மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். எலக்ட்ரீசியன். இவரது மனைவி ராஜேஸ்வரி(36). இவர்களுக்கு 7ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு 11மணியளவில் ராஜேஸ்வரி வீட்டில் தூக்கில் தொங்கினார். இதையடுத்து அவரது உடல் இறக்கப்பட்டது. குழந்தை இல்லாத ஏக்கத்தில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து உறவினர்கள் திரண்டனர். பின்னர், போலீசுக்கு தெரியாமல் உடலை எரித்து விடலாம் என முடிவு செய்தனர்.

நேற்று காலை ராஜேஸ்வரியின் உடலை குளிப்பாட்டும்போது அவரது முதுகில் காயம் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் சந்தேகமடைந்த உறவினர்கள் உடனடியாக கன்னங்குறிச்சி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசேதனைக்கான அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தலைமறைவான கணவர் கண்ணனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ராஜேஸ்வரி தூக்கு போட்டு இறந்தரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Ambalam Salem ,
× RELATED உடலை குளிப்பாட்டும் போது காயம்...