×

பொதுமக்கள் எதிர்பார்ப்பு தெரசா கார்னரில் பயன்பாட்டுக்கு வராத சிக்னலால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூர், மார்ச் 6: கரூர் பகுதியில் இருந்து திருச்சி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சுங்ககேட், தெரசா கார்னர் வழியாக செல்கிறது. தெரசா கார்னர் பகுதியில் இருந்து திருச்சி மற்றும் பசுபதிபாளையம் போன்ற பகுதிகளுக்கு இரண்டு வழிகளில் போக்குவரத்து நடைபெறுகிறது. மொத்தத்தில் இந்த இடத்தில் மூன்று வழிப்போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

ஆனால் தெரசா கார்னர் சந்திப்பு பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிக்னல் அமைக்கப்பட்டிருந்தாலும் இதுநாள் வரை பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதனால் இந்த கார்னர் பகுதியில் இருந்து பசுபதிபாளையம், கொளந்தானூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த சாலையின் வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்களும் அதிகளவு சென்று வருகின்றன. எனவே அனைத்து தரப்பினர்களின் நலன் கருதி தெரசா கார்னர் பகுதியில் உள்ள சிக்னல் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Motorists ,Theresa Corner ,
× RELATED திருப்பதிசாரம் டோல்கேட்டில் கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி