×

புதுச்சத்திரம் அருகே ஓடும் ரயிலில் கழிப்பறை கதவு என நினைத்து திறந்தவர் கீழே விழுந்து பலி

சேந்தமங்கலம், மார்ச் 6: சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அடுத்துள்ள பிச்சாம்பானையத்தை சேர்ந்த விவசாயி சேகர் மகன் மணிகண்டன் (24). இவர் தங்கள் வீட்டில் நடக்கும் காதணி விழாவிற்காக திருநெல்வேலியில் உள்ள உறவினர்களை அழைக்க நேற்று முன்தினம் இரவு, சேலத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றார். அப்போது புதன்சந்தை அருகே உள்ள அண்ணா நகர் ரயில்வே மேம்பாலத்தில் ரயில் சென்ற போது படிக்கட்டில் உட்கார்ந்து பயணம் செய்த மணிகணிடன் தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோல கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த செல்வக்குமார்(45). இவர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல, நேற்று முன்தினம் இரவு பாலக்கட்டில் இருந்து பழனி வழியாக சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் குளிர் சாதனப் பெட்டியில் பயணம் செய்துள்ளர்.  நள்ளிரவில் புதுச்சத்திரம் அடுத்த கண்ணூர்பட்டி பகுதியில் ரயில் சென்ற போது, கழிப்பறைக்கு செல்ல வந்த செல்வக்குமார், கழிப்பறை கதவை திறப்பதற்கு பதிலாக, தூக்க கலகத்தில் ரயில் பெட்டியின் கதவை திறந்து தவறி வெளியே விழுந்து உயிரிழந்தார். இந்த இரு சம்பவம் குறித்து சேலம் ரயில்வே  போலீசார் வழக்குபதிவு செய்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Puducherry ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை