×

ராசிபுரத்தில் மின்கம்பம் விழுந்து ஒருவர் படுகாயம்

ராசிபுரம், மார்ச் 6:ராசிபுரம் பழைய  பேருந்து நிலையம் அருகே, நகராட்சி சார்பில் சுமார் 50அடி உயர  மின்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கம்பம் பழுதடைந்த நிலையில் இருந்துள்ளது.  இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுந்தரம் வீட்டு கிரஹபிரவேசத்தில்  கலந்துகொண்டு புறப்பட்டு சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில், பழுதடைந்த மின்கம்பம், திடீரென உடைந்து சாலையில் விழுந்தது. அப்போது  சாலையில் நடந்துசென்ற அத்தனூர் ஆயிபாளையத்தை சேர்ந்த விஜயன் என்பவர்  படுகாயமடைந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, ராசிபுரம் அரசு  மருத்துவமனையில் சேர்ந்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம்  ஏற்படவில்லை.

Tags :
× RELATED பழுதான தண்ணீர் தொட்டி இடிப்பு