×

ராசிபுரம் அருகே தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

ராசிபுரம், மார்ச்  6: ராசிபுரம் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, ஆண்டகளூர்கேட்  பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில்  நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொள்ள வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி  பழனிசாமிக்கு,  ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட்டில் மேளதாளத்துடன் உற்சாக  வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, கலெக்டர்  மெகராஜ் உள்ளிட்டோர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும்  வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் எம்எல்ஏ பாஸ்கர்,  ராசிபுரம்  நகர கூட்டுறவு வங்கி தலைவரும், நகர செயலாளருமான பாலசுப்ரமணியன், ஒன்றிய  செயலாளர்கள் நாமகிரிப்பேட்டை பொன்னுசாமி, ராசிபுரம் காளியப்பன்,  வெண்ணந்தூர் தாமோதரன், மசக்காளிபட்டி கூட்டுறவு சங்க தலைவர் பிரகாசம்,  மாவட்ட மகளிர் அணி ராதா சந்திரசேகர், மற்றும் கட்சியினர் வரவேற்றனர். தொடர்ந்து  முதல்வர், ராசிபுரம் புதுப்பாளையத்தில் முன்னாள் எம்பியும், மாவட்ட  ஊராட்சிக்குழு துணைதலைவர் பி.ஆர்.சுந்தரம் வீட்டு கிரஹபிரவேசத்தில்  கலந்துகொண்டனர். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். சிறிது  நேரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்து சென்றார். மேலும்,  அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, அன்பழகன், செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர்  முனுசாமி, டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டார்கள்.

Tags : Chief Minister ,Rasipuram ,Tamil Nadu ,
× RELATED ராசிபுரம் போதமலையில் உள்ள 1,142...